Church of St. Antony Irumpili,
Church History
தொடக்கத்தில் ஒரு சிறு குருசடி கட்டப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர்.
09-09-1951 ல் ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 30-08-1959 ல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
முதலில் மாத்திரவிளை மற்றும் ரீத்தாபுரம் பங்குகளின் கிளைப்பங்காக இருந்தது. 1997 ஆம் ஆண்டு முதல் களிமார் பங்கின் கிளைப் பங்காக ஆனது. பின்னர் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.
ஆலயத்திற்கருகில் புனித அந்தோணியார் குருசடி அமைக்கப்பட்டுள்ளது.
இரும்பிலி பகுதியில் சற்றே உட்புறமாக நெசவாளர் தெருவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
வழித்தடம் :
கருங்கல் - குளச்சல் வழித்தடத்தில், இரும்பிலி ஜங்சனில் இருந்து உட்புறமாகவும், ஆலஞ்சி -பனவிளை வழியாகவும் இவ்வாலயத்திற்கு வரலாம்.
Information
Church of St. Antony Irumpili, Colachel, Kanyakumari ? 629 251
