தணிகை புதுமை மாதா திருத்தலம்
Church History
இடம் : திருத்தணி
மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை-மயிலை உயர் மறை மாவட்டம்
நிலை : திருத்தலம்
கிளைகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு
2. குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி
3. தூய குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு.
பங்குத்தந்தை : அருட்பணி N. சேகர்
குடும்பங்கள் : 95
அன்பியங்கள் : 4
ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு
திங்கள் முதல் வெள்ளி வரை : மாலை 06.15 மணிக்கு ஜெபமாலை தொடர்ந்து திருப்பலி
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08 ம் தேதி கொடியிறக்கம் என பத்து நாட்கள்.
சிறப்பு தகவல்கள் :
சமய வேறுபாடுகள் இன்றி பிற சமய மற்றும் பிறசபை மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து புதுமை மாதாவிடம் ஜெபித்து இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 08- ம் தேதி மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, அன்னையின் தேர்பவனி, திருப்பலி, நற்கருணை ஆராதனை, சாட்சியப்பகிர்வு, மந்திரித்த எண்ணெய் நெற்றியில் பூசுதல் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு மக்களும் கலந்து கொள்கின்றனர்.
தணிகை புதுமை மாதா வழியாக பெற்றுக் கொண்ட நன்மைகளை சாட்சியப் பகிர்வின் வழியாக நன்றியுணர்வுடன் தெரிவிக்கின்றனர்.
பௌர்ணமி முழு இரவு ஜெபம் இரவு 09.30 மணி முதல் விடியற்காலை 03.30 மணி வரையிலும் நடக்கின்றது.
வழித்தடம் : திருப்பதி செல்கின்ற பிரதான சாலையில், திருப்பதிக்கு முன்பாக 60 கிமீ - ல் இவ்வாலயம் திருத்தணியில் அமைந்துள்ளது.
Information
Tiruthani
