Rajakanni Matha Church
Church History
புனித ராஜகன்னி மாதாவின் ஆலயம் சுமார் 1650-ல் ஒரு சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய ஆலயம் 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது.
1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து திறந்துவைத்தார்.
ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது.
1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால், கடகுளம் புனித ராஜகன்னி மாதா ஆலயம் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது. அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.
சிற்றாலயங்கள்:
புனித அந்தோணியார் சிற்றாலயம்
புனித சவேரியார் சிற்றாலயம்
புனித ராஜகன்னி மாதா சிற்றாலயம்
கிளைப் பங்கு:
அதிசயபுரம் - புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்.
Information
Rajakanni Matha Church
Kadakulam - Thoothukudi Dt.
628 656 - India




