Infant Jesus Church
Church History
மேதகு. ஆயர் அந்தோனி டிவோட்டா, திருச்சி மறை ஆயர் அவர்களின் தலைமையில், 2007 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் நாள், திருப்பலியுடன் குழந்தை இயேசு ஆலய இடம் புனிதம் செய்யப்பட்டு அப்போதைய காட்டூர் புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை, அருட்பணி. அருளானந்தம், முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
2008 ஆம் ஆண்டு, ஜூன் 15 ஆம் நாள், அருட்பணி. சகாயராஜா அவர்கள் காட்டூர் பங்கின் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றபின் கட்டுமான பணிகள் அவரிடம் ஒப்படைக்கபட்டது.
2012 ஆம் ஆண்டு, ஜூலை 7 ஆம் நாள், ஞாயிறு, மேதகு. ஆயர் அந்தோனி டிவோட்டா, திருச்சி மறை ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு ஆலயம் திறக்கப்பட்டது. வழிபாடுகளும், நவநாள் ஜெபமும் துவங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு, ஜூன் 6 ஆம் நாள், மேதகு. ஆயர் அவர்கள் காட்டூர் புனித அந்தோனியார் ஆலய பங்கிலிருந்து அற்புத குழந்தை இயேசு ஆலயத்தை தனிப்பங்காக உயர்த்தி, பங்கின் முதல் பங்கு தந்தையாக அருட்பணி. S. இன்னாசி முத்து அடிகளாரை நியமனம் செய்தார்கள்.
பங்கு தந்தையர்கள்:
1. அருட்பணி. S. இன்னாசி முத்து
(06.06.2013 முதல் 28.06.2017)
2. அருட்பணி. A. சூசைராஜ்
(29.06.2017 முதல்....)
Information
Kulandai Yesu Nagar,
R.K.Puram - Kattur,
Tiruchirappalli - Tamil Nadu
620 019 - India




