St Therasa's Church
Church History
இடம் : வல்லனி, சிவகங்கை அஞ்சல், 630561
மாவட்டம் : சிவகங்கை
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : சிவகங்கை
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், காட்டுச்சூரை
2. வாழவைக்கும் வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாட்டரசன்கோட்டை
3. புனித அந்தோனியார் ஆலயம், வந்தவாசி
4. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், குயவன்நடப்பு
5. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், காட்டுப்புளி
6. சாத்தனி (ஆலயம் இல்லை)
பங்குத்தந்தை : அருட்பணி. S. லூர்துராஜ்
ஜெபதேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பங்குத்தந்தையின் கைப்பேசி எண்கள் :
9443498686
6382184058
குடும்பங்கள் : 230 (கிளைப்பங்குகள் : காட்டுச்சூரை 30, நாட்டரசன்கோட்டை 12, வந்தவாசி 12, குயவன்நடப்பு 3, சாத்தனி 5, காட்டுப்புளி 1)
அன்பியங்கள் : 10
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணிக்கு
செவ்வாய் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள், திருப்பலி
வியாழன் மாலை 06.00 மணிக்கு குழந்தை இயேசு நவநாள், திருப்பலி
முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை (ஒரு மணி நேரம்) தொடர்ந்து திருப்பலி
முதல் சனி மாலை 06.00 மணிக்கு திருப்பலி
கிளைக் கிராமங்களில் தேவையின் அடிப்படையிலும், மாதத்திற்கு ஒரு தடவை வார நாட்களில் (புதன், வெள்ளி, சனி) திருப்பலி நடைபெறும்.
திருவிழா : செப்டம்பர் மாதம் 05 ம் தேதி.
வழித்தடம் : சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து வல்லனிக்கு 5கி.மீ தூரம்.
சிவகங்கை தொண்டி சாலையில் -ஆயுதப்படைபிரிவு -வல்லனி
Location map : https://g.co/kgs/7mGMrZ
வரலாறு :
சிவகங்கை கத்தீட்ரல் பேராலயத்தின் ஒரு பகுதியாக விளங்கிய வல்லனி, 29.06.2016 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்களால் புனித அன்னை தெரசாவை பாதுகாவலியாகக் கொண்டு, மறைமாவட்ட உதவியுடன் ஷெட் ஆலயம் கட்டப்பட்டு, தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. தாமஸ் பரிபாலன் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்.
27.05.2018 அன்று தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. S. லூர்து ராஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்.
தற்காலிக ஷெட் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. அகவே பங்குத்தந்தை அருள்பணி. S. லூர்துராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, முன்னாள் முதன்மை குரு பேரருட்திரு. ஜோசப் லூர்துராஜா மற்றும்
மும்மதத் தலைவர்கள் இணைந்து புதிய ஆலயத்திற்கு 15.09.2019 அன்று அடிக்கல் நாட்டப் பட்டது.
தொடர்ந்து மறைமாவட்டம் மற்றும் பங்குத்தந்தை, பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் சற்று தொய்வுற்ற போதும், பங்குத்தந்தை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
கருணையின் வடிவான புனித அன்னை தெரசாவின் ஆலயமானது, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகள் கிடைக்கப் பெற்று, விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, அர்ச்சிப்பு விழா காண இறைவனிடம் ஜெபிப்போம்.
வல்லனி பங்கிலிருந்து தற்போது இறையழைத்தல் பெற்று, பலர் துறவற மடங்களில் பயின்று வருகின்றனர்.
1. சகாய அன்னை
2. அந்தோனியார்
3. மிக்கேல் அதிதூதர்
4. அன்னை தெரசா
5. பாத்திமா அன்னை,
6. குழந்தையேசு
7. ஆரோக்கிய அன்னை,
8. லூர்து அன்னை
9. அசிசியார்
10. அருளானந்தர் -ஆகிய பத்து அன்பியங்களும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப் பேரவை,
2. அன்பியங்கள் 10,
3. புனித வின்சென்ட் தே பவுல் சபை,
4. மரியாயின் சேனை,
5. அன்னை தெரசா இளையோர் இயக்கம்,
6. அன்னை தெரசா செபக் குழு
7. குடும்ப நல வாழ்வு பணிக்குழு
8. திருவழிபாட்டு பணிக்குழு
9. இயேசுவின் கண்மணிகள்.
புனித அன்னை தெரசாவின் பொன்மொழிகள்:
நான் பிரார்த்தனையை விட சேவையை நம்புகிறேன். கடவுளை அடைய இதுவே நான் கண்டுபிடித்திருக்கிற சுலபமான வழி.
செபம் செய்து பாருங்கள் நீங்கள் கடவுள் அருகில் போவீர்கள். சேவை செய்து பாருங்கள் கடவுளே உங்களருகில் வருவார்.
ஒவ்வொரு முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களின் திறப்பு விழா என்பது நற்கருணைப்பேழை திறப்பு விழாவிற்கு சமம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. S. லூர்து ராஜ்.
Information
Vallani,Sivagangai post
